நாசா மரைனர் திட்டம் (1962 - 1973) NASA Mariner Plan in Tamil
நாசா மரைனர் திட்டம் (1962 - 1973)
NASA Mariner Plan in Tamil
Space science information,
★ மரைனர் திட்டம் (Mariner program) என்பது செவ்வாய், வெள்ளி (மேர்க்குரி) ஆகிய கோள்களை ஆராய்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்ணாய்வு மையத்தினால் விண்ணுக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லா தானியங்கி விண்கப்பல்களுக்கான திட்டமாகும்.
★ இது பூமியில் இருந்து வேறொரு கோளுக்கு முதன் முதலில் ஒரு விண்கப்பலை இத்திட்டத்தின் மூலம் அனுப்பினர். அதுமட்டுமின்றி வேறொரு கோளை அதன் ஒழுக்கில் சுற்றி வந்த முதலாவது கப்பலும் இத்திட்டத்திலேயே அனுப்பப்பட்டது.
★ இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 10 கப்பல்கள் அனுப்பப்பட்டன. இவற்றில் ஏழு மட்டுமே வெற்றிகரமாக அமைந்தன.
★ மற்றைய மூன்றும் தொலைந்து போயின.
★ இத்திட்டத்திற்கெனத் தயாரிக்கப்பட்ட மரைனர் 11 மற்றும் மரைனர் 12 ஆகியன வொயேஜர் திட்டத்தில் அனுப்பப்பட்டன.
★ மரைனர் திட்டத்திற்கு மொத்தமாக 554 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவழிக்கப்பட்டுள்ளது.
மரைனர் திட்டக் கலங்கள் :
மரைனர் 1
★ வெள்ளி கோளை நோக்கி 1962 சூலை 22 இல் இது அனுப்பப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட 5 நிமிடங்கக்ளுக்குள் வெடித்துச் சிதறியது.
மரைனர் 2 :
★ இது 1962 ஆகத்து 27 இல் வெள்ளியை நோக்கி 3-மாதத் திட்டத்தில் ஏவப்பட்டது.
★ இது வெற்றிகரமான பயணமாக அமைந்தது. இதுவே வேறொரு கோளை நோக்கிச் சென்ற முதலாவது விண்கலமாகும்.
மரைனர் 3
★ இது செவ்வாய்க் கோளை நோக்கிச் செலுத்தப்பட்டது. ஆனால் இது தொலைந்து விட்டது.
மரைனர் 4
★ இது செவ்வாய்க் கோளை நோக்கி 1964 நவம்பர் 28 இல் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
★ செவ்வாய்க்குக் கிட்டவாக சென்ற முதல் விண்கலமாகும்.
★ ஆனாலும் பின்னர் தொடர்புகள் கிடைக்கவில்லை.
மரைனர் 5
★ இது 1967 சூன் 14 இல் வெள்ளியை நோக்கி ஏவப்பட்டது.
★ அக்டோபரில் கோளின் பார்வைக்கெட்டிய தூரம் வரை சென்றது.
★ வெள்ளியின் சுற்றுச்சூழலை அறிவதற்காக வானொலி அலைகள் மூலம் பல பரிசோதனைக் கருவிகளை எடுத்துச் சென்றது.
★ ஆனால் துரதஸ்டவசம்மாக இதன் தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.
மரைனர் 6, 7 :
★ இவை செவ்வாய்க்கு முறையே 1969 பெப்ரவரி 24 இலும், 1969 மார்ச் 27 இலும் ஏவப்பட்டன.
★ இது செவ்வாயின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளை நோக்கிச் செலுத்தப்பட்டன.
★ இவையும் தொடர்புகள் அற்றுப்போயின.
மரைனர் 8, 9 :
★ செவ்வாய்க் கோளின் மேற்பரப்பைப் படம் பிடிக்கவென அனுப்பப்பட்டவை.
★ மரைனர் 8 ஏவப்படுகையில் அழிந்தது.
★ மரைனர் 9 1971 மே மாதத்தில் ஏவப்பட்டது.
★ இது செவ்வாயின் முதலாவது செயற்கைக் கோள் ஆனது.
★ செவ்வாயின் சுற்றுவட்டத்துக்கு 1971 நவம்பரில் சென்று அதன் மேற்பரப்பின் படங்களைப் பிடித்தது.
★ இது தற்போது இயங்கவில்லை.
★ ஆனாலும் இது 2022 வரை செவ்வாயின் சுற்றுவட்டத்தில் சுற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரைனர் 10 :
★ இது 1973 நவம்பர் 3 இல் வெள்ளியை (வீனசை) நோக்கிச் செலுத்தப்பட்டது.
★ அதற்குப் பின்னர் அது அதிலிருந்து விலகி புதன் (மேர்க்குரி) நோக்கிச் சென்றது.
★ இரண்டு கோள்களின் பார்வைக்குச் சென்ற முதலாவது கலம் இதுவாகும்.
Comments
Post a Comment